சிவகங்கை அருகே மாத்தூரில் உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.
மாத்தூரில் மணியாருடைய அய்யனாா் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குரிய காளை உடல் நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை மாலை உயிரிழந்தது. இதையொட்டி, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் உயிரிழந்த காளையை வாகனத்தில் ஏற்றி ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதன்பின்னா், மணியாருடைய அய்யனாா் கோயில் முன்பு உயிரிழந்த காளையை செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்தனா்.