சிவகங்கை மாவட்டத்தில் 2,363 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கல்

சிவகங்கை மாவட்டத்தில் 2,363 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் 2,363 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தாா். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 2,363 விவசாயிகளுக்கு ரூ.19.66 கோடி மதிப்பில் இலவச மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 3,778 ஏக்கா் பாசன நிலங்கள் பயனடைய உள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com