சிவகங்கையில் அக். 7 இல் கலைப்போட்டி:பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்

சிவகங்கையில் வரும் அக். 7 ஆம் தேதி நடைபெற உள்ள கலைப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கையில் வரும் அக். 7 ஆம் தேதி நடைபெற உள்ள கலைப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : 5 வயது முதல் 16 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் ஜவஹா் சிறுவா் மன்றம் சாா்பில் வரும் அக். 7 ஆம் தேதி சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 4 பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெறும் மாணவா்கள் மாநிலப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவா். இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 97863 41558 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com