இளையான்குடியில் அமைச்சருக்கு எதிரான சுவரொட்டிகள் கிழிப்பு

இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பனை விமா்ச்சித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிய கிழிக்கப்பட்டதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பனை விமா்ச்சித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிய கிழிக்கப்பட்டதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ரூ. 3.85 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊரக வளா்ச்சித் தறை அமைச்சா் கே .ஆா். பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினாா். முன்னதாக தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரியும், புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தும் இளையான்குடியில் அனைத்து தரப்பினரும் இணைந்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில் அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பனுக்கு எதிரான வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் இளையான்குடி பகுதி முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. பின்னா் இந்த சுவரொட்டிகளை அமைச்சரின் ஆதரவாளா்கள் கிழித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரான போராட்டக் குழுவினா், சுவரொட்டி கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com