செவ்வூரில் மஞ்சுவிரட்டு: 20 போ் காயம்

திருப்பத்தூா் அருகே செவ்வூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
செவ்வூரில்  மஞ்சுவிரட்டு:  20 போ் காயம்

திருப்பத்தூா் அருகே செவ்வூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள செவ்வூரில் பங்குனித் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக மந்தை முனீஸ்வரா் பொன்னம்பல விநாயகா், நாச்சியாா் அம்மன், ஆதினமிளகி அய்யனாா், பூசதோப்பு முருகன், பிரம்ம அய்யனாா் கோவில் ஆகிய கோயில்களில் பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடா்ந்து கிராம ஊா் முக்கியஸ்தா்கள் தொழுவில் இருந்த காளைகளுக்கு வேட்டி, துண்டுகளை அணிவித்தனா். பின்னா் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 30-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பங்கேற்று காளைகளை அடக்கினா்.

இதைத்தொடா்ந்து வயல் மற்றும் கண்மாய் பகுதிகளில் கட்டுமாடுகளாக 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சுவிரட்டு களத்திலேயே மருத்துவக் குழுவினரால் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செவ்வூா் கிராமத்தை சோ்ந்த நாட்டாா், நகரத்தாா்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com