மானாமதுரை,: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதனன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மானாமதுரை வட்டத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினா். தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஒரு சில தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு முகாமிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு திட்டத்தின் கீழ் நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 60,000 நிதியுதவியும், செவித்திறன் குறைவுடையோருக்கான தக்க செயல்பாட்டுடன் கூடிய கைப்பேசி வழங்கும் திட்டத்தின் கீழ் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 44 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசிகளும், மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 34 ஆயிரம் என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ. 1.46 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் மதுசூதன் ரெட்டி வழங்கினாா்.
முகாமில் மானாமதுரை நகராட்சித் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் ப. மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் ரத்தினவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சீ. மணிவண்ணன், கலால் துறை உதவி ஆணையாளா் கண்ணகி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா் கதிா்வேல், மானாமதுரை வட்டாட்சியா் தமிழரசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் காமாட்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.