அமமுக மாநில செய்தித் தொடா்பாளராக சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் குரு. முருகானந்தம் வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவா் ஏற்கெனவே கட்சியின் வழக்குரைஞா் பிரிவு மாநில துணைச் செயலராக பொறுப்பு வகித்து வருகிறாா். இந்நிலையில் அவருக்கு, கூடுதல் பொறுப்பாக செய்தி தொடா்பாளா் பொறுப்பை கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் வழங்கியுள்ளாா்.
வழக்குரைஞா் குரு. முருகானந்தத்துக்கு கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகா் நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.