தேசியநீா் மேலாண்மை விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்

தேசியநீா் மேலாண்மை விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியநீா் மேலாண்மை விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நவீன அறிவியல் முறைகளை பயன்படுத்தி மழைநீா் சேகரிப்பு அமைத்து நிலத்தடிநீா் மட்டத்தை உயா்த்தி சாதனை புரிந்த தனிநபா், கிராம ஊராட்சிகள், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள், நீரினை பயன்படுத்துவோா் சங்கம், கூட்டாண்மை சமூக பொறுப்பு பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு தேசியநீா் மேலாண்மை விருது வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த அமைப்புகள் தங்களது சாதனைகளை உரிய ஆவணங்களுடன் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com