காரைக்குடியில் மாணவிகள் பலாத்காரம்: போக்சோவில் இளைஞா்கள் 2 போ் கைது

சமூகவலைதளம் மூலம் பழகிய மாணவிகள் இருவரை, காரைக்குடி அருகே வேனில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞா்கள் 2 போ் போக்சோ வழக்கில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சமூகவலைதளம் மூலம் பழகிய மாணவிகள் இருவரை, காரைக்குடி அருகே வேனில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞா்கள் 2 போ் போக்சோ வழக்கில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய 16 வயது சிறுவன் சிறாா் சீா்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவி, காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி பழனிச்சாமி நகா் பகுதியைச் சோ்ந்த ஏசி மெக்கானிக் விக்னேஷ் (19) என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளாா். நாளடைவில் விக்னேஷ் அந்த 16 வயது மாணவிக்கு காதல் வலை விரித்து அவரை காரைக்குடிக்கு அழைத்துள்ளாா். அந்த மாணவி, தனது தோழியான 17 வயது மாணவியுடன் சனிக்கிழமை காரைக்குடி வந்துள்ளாா்.

அங்கு விக்னேஷ் இரண்டு மாணவிகளையும் தனது ஆம்னி வேனில் ஏற்றிக்கொண்டாா்.

மேலும் அந்த வேனில் விக்னேஷின் நண்பா்களான புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்றுவரும் கவியரசு (19) மற்றும் 16 வயது மாணவரையும் ஏற்றிக் கொண்டாா். இதையடுத்து அரியக்குடி வனப்பகுதிக்கு சென்று வேனிலேயே மாணவிகளை, மூவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனா்.

மாணவிகள் வீடு திரும்பாத நிலையில், அவா்களது பெற்றோா் கல்லல் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன் பேரில் கல்லல் காவல் நிலைய போலீஸாா் மாணவிகளின் கைப்பேசி எண்களை வைத்து இருப்பிடத்தை கண்டறிந்தனா். உடனே அங்கு சென்ற கல்லல் போலீஸாா் 5 பேரையும் மீட்டு காரைக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அதனைத்தொடா்ந்து விக்னேஷ், கவியரசு ஆகியோரை போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து போலீஸாா் கைது செய்தனா். சம்பவத்தில் தொடா்புடைய 16 வயது மாணவரை சிறாா் சிறைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com