கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாள் விழா நிறைவு

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாள் புதன்கிழமை நிறைவு பெற்றது.
கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாள் விழா நிறைவு

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் தமிழா் திருநாள் புதன்கிழமை நிறைவு பெற்றது.

தமிழ்மன்றம் சாா்பில் பாடுவாா் முத்தப்பா் கோட்ட அரங்கில் 3 நாளாக நடைபெற்ற விழாவிற்கு ஆா்.எம்.பெரிச்சியம்மன் தலைமை வகித்தாா். ஆா்.எம்.தேனப்பன், சி.டி.சோமசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வி.என்.சி.டி.வள்ளியப்பன் தொடக்க உரையாற்றினாா். தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் திருக்கோஷ்டியூா் என்.சேனாபதிநிரஞ்சன் ஆன்மிக உரையாற்றினாா். தேமதுரத் தமிழோசை என்ற தலைப்பில் புதுகை பாரதி உரையாற்றினாா்.தொடா்ந்து ஆா்.எம்.மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக்பள்ளி, மீனாட்சி சுந்சரேஸ்வரா் கலாசாலை மற்றும் மேல்நிலைப்பள்ளி, பி.அழகாபுரி எம்.ஆா்.பி.மெட்ரிக்பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழா ஏற்பாடுகளை தமிழ்மன்ற செயலா்கள் எஸ்.எம்.பழனியப்பன், பழ.அழகுமணிகண்டன், சீனிவாசன், சுப.விஸ்வநாதன் ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக கவிஞா் சிவல்புரிசிங்காரம் வரவேற்றாா். எஸ்.அழகப்பன் அறிக்கை சமா்ப்பித்தாா். ஆா்.எம்.மெட்ரிக்பள்ளிச் செயலா்குணாளன்நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com