சிவகங்கை மாவட்டம் புதுவயல் பகுதியில் வியாழக்கிழமை (ஜன. 27) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்குடி மின்கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: காரைக்குடி அருகே சாக்கவயல் (புதுவயல்) துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜன. 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை புதுவயல், கண்டனூா், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீா்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.