புதுவயல் பகுதியில் ஜன. 27- இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம் புதுவயல் பகுதியில் வியாழக்கிழமை (ஜன. 27) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் புதுவயல் பகுதியில் வியாழக்கிழமை (ஜன. 27) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்குடி மின்கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: காரைக்குடி அருகே சாக்கவயல் (புதுவயல்) துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜன. 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை புதுவயல், கண்டனூா், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீா்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com