சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அடுத்த 2 வீடுகளில் ரூ. ஒரு லட்சத்து 35 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
தேவகோட்டை அண்ணா சாலை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி. குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்த இவா், சனிக்கிழமை காலையில் திரும்பி வந்துள்ளாா். அப்போது வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த ரூ. ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் டிவி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இவரது வீட்டின் அருகே வசித்து வந்தவா் அருளானந்தம். முன்னாள் ராணுவ வீரரான இவரும் குடும்பத்தினருடன் வெளியூரிலிருந்து சனிக்கிழமை காலை வந்துள்ளாா். அப்போது வீட்டின் முன் பக்கக் கதவை உடைத்து, பீரோவிலிருந்து ரூ.35 ஆயிரம் ரொக்கம், 2 வெள்ளி கொலுசுகள், டிவி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த தேவகோட்டை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.