திருப்பத்தூரில் கல்வி மேலாண்மைக்குழு விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சிமன்றத் தலைவி கோகிலாராணி தலைமை வகித்துப் பேசினாா். இதில், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், கோமதிசண்முகம், சாந்திசோமசுந்தரம், நேரு, சீனிவாசன், நாகமீனாள் திருஞானசம்மந்தம், ஹரிசரண்யா, சையதுமுகமது இப்ராகிம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து கலைநிகழ்ச்சிகள் மூலம் கல்வி மேலாண்மைக்குழு பணிகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.