சிவகங்கையில் நாளை மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம்

சிவகங்கையில் வரும் புதன்கிழமை (மே 4) மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வை பொறியாளா் து.இரா.

சிவகங்கையில் வரும் புதன்கிழமை (மே 4) மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வை பொறியாளா் து.இரா. இந்திரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில் புதன்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடா்பான புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீா்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com