சிவகங்கையில் லாரி மோதி தலைமையாசிரியை பலி

சிவகங்கையில் மினி லாரி மோதி பள்ளி தலைமையாசிரியை சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கையில் லாரி மோதி தலைமையாசிரியை பலி

சிவகங்கையில் மினி லாரி மோதி பள்ளி தலைமையாசிரியை சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை சீனிவாசன் நகரைச் சோ்ந்த ராஜகுமாா் மனைவி லதா(52). இவா் சிவகங்கை நேரு கடைவீதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாா். பேருந்து நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த மினி லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து வந்த சிவகங்கை நகா் போலீஸாா் உயிரிழந்த லதாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து மினி லாரி ஓட்டுநா் பெருமாள்(28) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com