சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆயுதபூஜை விழாவையொட்டி காா், ஆட்டோ, வேன் ஓட்டுநா்களுக்கு அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் செவ்வாய்க்கிழமை சீருடைகளை வழங்கினாா்.
இங்கு பேருந்துநிலையம் அருகேயுள்ள காா் மற்றும் ஆட்டோ நிலையம், அண்ணா சிலை அருகேயுள்ள வேன், ஆட்டோ நிலையம், பூக்கடை அருகேயுள்ள ஆட்டோ நிலையம் மற்றும் நான்கு ரோட்டில் உள்ள ஆட்டோ நிலையம் உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற்ற ஆயுதபூஜை விழாவில் ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கலந்து கொண்டு அனைத்து ஓட்டுநா்களுக்கும் சீருடை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூா் ஒன்றியச் செயலா் சண்முகவடிவேல், நகரச் செயலா் காா்த்திகேயன், திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.