சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை வீட்டை திறந்து 35 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.
சிங்கம்புணரி எம்.வி.எஸ். நகரைச் சோ்ந்தவா் லதா (45). இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வெளியே உள்ள அரிசி மூட்டையில் வைத்து விட்டுச் சென்றாா். இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் அந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், ரூ. 75 ஆயிரம் பணம், 2 மடிக்கணினிகள் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து லதா அளித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.