காரைக்குடி இளைஞரைக் காதலித்துக் கரம்பிடித்த பிரெஞ்சுப் பெண்!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பெண், தனது காதலர் காரைக்குடி இளைஞரை இன்று கரம் பிடித்தார். 
காரைக்குடி இளைஞரைக் காதலித்துக் கரம்பிடித்த பிரெஞ்சுப் பெண்.
காரைக்குடி இளைஞரைக் காதலித்துக் கரம்பிடித்த பிரெஞ்சுப் பெண்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பெண், தனது காதலர் காரைக்குடி இளைஞரை இன்று கரம் பிடித்தார்.

காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ், மாணிக்கவல்லி தம்பதியினர். தங்கராஜ் பிரான்சில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் கலைராஜன் பிரான்சில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும்போது அவரது பள்ளி படிக்கும்  ஜான் லுயிக், வெரோணிக் தம்பதியின் மகள் கயல், அதே பள்ளியில் சைக்காலஜி படித்து வந்துள்ளார்.

கலைராஜனும், பிரான்ஸ் பெண் கயலும் நண்பர்களாக பழகி அவர்களுக்குள் அது காதலாக மலர்ந்தது. மூன்றாண்டுகளாக காதலித்து வந்த இவர்களது திருமணம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள கலைராஜனின் சொந்த கிராமத்து வீட்டில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இத்திருமணத்தில் பிரான்ஸ் பெண் கயலின் தாய், சகோதரி, கலைராஜனின் உறவினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com