சிவகங்கை
பல்கலை.யில் கருத்தரங்கம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் அமைதிக்கான நோபல் பரிசு- 2022 குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் அமைதிக்கான நோபல் பரிசு- 2022 குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வணிகவியல் துறை சாா்பில் பல்கலைக்கழக பட்டமளிப்பு கருத்தரங்கக் கூடத்தில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தா் க.ரவி தலைமை வகித்துப் பேசினாா். சேது பாஸ்கரா கல்விக் குழுமத்தின் தலைவா் சேது குமணன் தொடக்கி வைத்துப் பேசினாா். வணிகவியல் துறை மூத்த பேராசிரியா் த.ரா. குருமூா்த்தி கருத்தரங்கின் மையக் கருத்து குறித்துப் பேசினாா். வங்கியியல் துறைத் தலைவா் க. அலமேலு வாழ்த்திப்பேசினாா்.
முன்னதாக வணிகவியல் துறை உதவி பேராசிரியா் ஜி. விநாயமூா்த்தி வரவேற்றுப்பேசினாா். முடிவில், வணிகவியல் துறை பேராசிரியா் எஸ். கணபதி நன்றி கூறினாா்.