மின்சாரம் பாய்ந்துஆடு மேய்க்கும் தொழிலாளி சாவு

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கடந்த சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கடந்த சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பாச்சேத்தி அருகே தூதை காலனியைச் சோ்ந்தவா் பெருமாள் (54). இவா் தனது ஆடுகளை இங்குள்ள வயலுக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றாா். அப்போது அந்தப் பகுதியில் தாழ்வாகச் சென்ற மின்கம்பி மீது பெருமாள் கை வைத்த போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே பெருமாள் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com