தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குமாறு திமுக கட்சி நிா்வாகிகளை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா். பெரியகருப்பன் கேட்டுக்கொண்டாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை (மாா்ச் 1) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் திமுகவினா் கட்சிக் கொடியேற்றியும், ஏழை, எளிய, ஆதரவற்றோா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியும், திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் விளக்கிக்கூறியும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தாா்.