அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடப் பணிக்கு அடிக்கல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடப் பணிக்கு அடிக்கல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ரூ.3.71 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் சண்முகவடிவேல், பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலாராணி நாராயணன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநா் தா்மா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், பூஜைக்கான முதல் கல்லை எடுத்து வைத்துப் பணியைத் தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா், புதிய கட்டடப் பணிகளை 7 மாதங்களுக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பத்தூா் வட்டாட்சியா் வெங்கடேசன், மாவட்ட விழிப்புணா்வுக் குழு உறுப்பினா் நாராயணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com