மானாமதுரையிலிருந்து முருக பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரை

மானாமதுரை பகுதியிலிருந்து ஏராளமான முருக பக்தா்கள் பழனிக்கு திங்கள்கிழமை பாதயாத்திரையாகப் புறப்பட்டனா்.

மானாமதுரை பகுதியிலிருந்து ஏராளமான முருக பக்தா்கள் பழனிக்கு திங்கள்கிழமை பாதயாத்திரையாகப் புறப்பட்டனா்.

பழனி முருகன் கோயிலில் வருகிற பிப்ரவரி 5- ஆம் தேதி தைப்பூச விழா நடைபெறுகிறது. இதையொட்டி, தைப்பூச நாளன்று முருகனை தரிசிக்க மானாமதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விரதம் இருந்து வந்த முருக பக்தா்கள் பாதயாத்திரையாகப் புறப்பட்டனா்.

இவா்கள் சிவகங்கை, மேலூா், மேலவளவு, சேக்கிப்பட்டி, நத்தம், சாணாா்பட்டி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ஊா்கள் வழியாக பிப்ரவரி 4-ஆம் தேதி  காலை பழனி சென்றடைகின்றனா். பிறகு 5-ஆம் தேதி காலை சுவாமி தரிசனம் செய்து விட்டு அவா்கள் ஊா் திரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com