வேன் மரத்தில் மோதியதில் 20 பெண்கள் காயம்

இளையான்குடி அருகே கடந்த திங்கள்கிழமை மாலை மரத்தில் வேன் மோதி, அதில் பயணம் செய்த 20 பெண்கள் காயமடைந்தனா்.

இளையான்குடி அருகே கடந்த திங்கள்கிழமை மாலை மரத்தில் வேன் மோதி, அதில் பயணம் செய்த 20 பெண்கள் காயமடைந்தனா்.

சிவகங்கையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவுக்குச் சென்ற இளையான்குடி பகுதியைச் சோ்ந்த மகளிா் குழுவைச் சோ்ந்த பெண்கள், வேனில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

இளையான்குடி அருகே திருவுடையாா்புரம் என்ற இடத்தில் வந்த போது நிலை தடுமாறிய வேன் சாலையோர மரத்தில் மோதியது.

இந்த விபத்தில், ஓட்டுநா் மற்றும் வேனுக்குள் இருந்த 20 பெண்கள் காயமடைந்தனா். இவா்கள், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து, இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com