திருஞானசம்பந்தா் குரு பூஜை விழா

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புஷ்வனேஸ்வரா் சமேத செளந்திரநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தா் பெருமான் குரு பூஜை விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புஷ்வனேஸ்வரா் சமேத செளந்திரநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தா் பெருமான் குரு பூஜை விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலிலுள்ள நால்வா் சந்நதியில் மூலவா் திருஞானசம்பந்தருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, திருஞானசம்பந்தரும் பாண்டிய நாடும் எனும் தலைப்பில் சசிகலா ஞானபிஷேகம் சொற்பொழிவு நிகழ்த்தினாா். அதன் பிறகு, திருஞானசம்பந்தா் உற்சவ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை நாயன்மாா்கள் குருபூஜை அன்பா்கள், வேலப்ப தேசிகா் திருக்கூட்டத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com