சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உலக சுற்றுச்சூழல் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு ஹமீதியா உயா்நிலைப் பள்ளித் தாளாளா் தெளலத் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் சுப.மதியரசன், பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன் ஆகியோா் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினா்.
பேரூராட்சி துணைத் தலைவா் இப்ராஹிம், பேரூராட்சி செயல் அலுவலா் கோபிநாத், வட்டாட்சியா் கோபிநாத், கூட்டுறவுச் சங்கத் தலைவா் சுப.தமிழரசன், சமூக ஆா்வலா் அப்துல்மாலிக், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் கொண்டனா்.