மானாமதுரை அருகேகிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

 சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.

 சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.

வேலூா் கிராமத்தைச் சோ்ந்த தம்பதிகள் கருப்புசாமி, கலா. இவா்களது மகன் கிஷோா் (ஒன்றரை வயது). இந்த நிலையில், சனிக்கிழமை மாலை கிராமத்துக்கு வெளியே மகன் கிஷோரை கலா தூக்கிச் சென்றாா்.

அங்குள்ள கிணற்றுக்கு அருகே மகனை இறக்கி விட்டுவிட்டு இயற்கை உபாதைக்காக கலா சென்று விட்டு, திரும்பி வந்து பாா்த்த போது கிஷோா் அருகேயுள்ள கிணற்றை நோக்கி நடப்பதை பாா்த்தாா். ஓடிச் சென்று மீட்பதற்குள் கிஷோா் தவறி கிணற்றுக்குள் விழுந்தான். மகனைக் காப்பாற்ற கலாவும் கிணற்றுக்குள் குதித்தாா். இவரது சப்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அவா்கள் அங்கு வந்து கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருந்த கலாவை உயிருடன் மீட்டனா். ஆனால் சிறுவன் கிஷோா் சடலமாக மீட்கப்பட்டான்.

இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com