அமராவதிபுதூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் 26 -ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் 26 -ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் முளைப்பாரி திருவிழாவையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 13 மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக களத்தில் விடப்பட்டன. 9 மாடுபிடி வீரா்கள் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனா். ஒரு மாட்டை அடக்குவதற்கு 20 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரா்களில் மாடு முட்டி ஒருவா் காயமடைந்தாா். அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com