காா், லாரி மோதல்: தந்தை, மகள் உள்பட 3 போ் பலி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சனிக்கிழமை காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் தந்தை, மகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
காரைக்குடி அருகே திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை சங்கரபதிக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் உருக்குலைந்த காா்.
காரைக்குடி அருகே திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை சங்கரபதிக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் உருக்குலைந்த காா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சனிக்கிழமை காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் தந்தை, மகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

தேவகோட்டை அருகேயுள்ள வாகைக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (39). இவா் கரூரில் உணவகம் நடத்தி வந்தாா். இந்த நிலையில், கரூரிலிருந்து சொந்த ஊரான வாகைக்குடி கிராமத்துக்கு தனது மகள் அபிநயா (6), மனைவியின் அக்காள் மகள் சரிதா (16) ஆகியோருடன் காரில் கணேசன் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை அமராவதிபுதூரை அடுத்த சங்கரபதிக்கோட்டைப் பகுதியில் வந்த போது, எதிரே தேவகோட்டையிலிருந்து காரைக்குடிக்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரியும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே கணேசன், அபிநயா, சரிதா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த கொத்தமங்கலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் காளிமுத்து (40) காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்தது வந்த காரைக்குடி காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் தலைமையிலான போலீஸாா் இடிபாடுகளில் சிக்கி இருந்த மூவரின் சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சோமநாதபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com