சமுதாயக் கல்லூரியில் பயிற்சி சான்றிதழ் வழங்கல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் பணிநியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் நேஷனல் அகாதெமி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கிய தொழில்துறை கூடுதல் ஆணையா் கே. ஜெயபபாலன்.
திருப்பத்தூா் நேஷனல் அகாதெமி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கிய தொழில்துறை கூடுதல் ஆணையா் கே. ஜெயபபாலன்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் பணிநியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரித் தாளாளா் காசிநாதன் தலைமை வகித்தாா். பாலகிருஷ்ணன், சுரேஷ்பிரபாகா், கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திருச்சி தொழில்துறை கூடுதல் ஆணையா் கே. ஜெயபாலன் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கிப் பேசினாா். முன்னதாக கல்லூரி முதல்வா் வெங்கடேசன் வரவேற்றாா். பேராசிரியா் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com