சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் வரும் வியாழக்கிழமை (ஜன. 5) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
காரைக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் (ஹவுசிங் போா்டு), செக்காலைக்கோட்டை, பாரி நகா், கல்லூரிச்சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என காரைக்குடி செயற்பொறியாளா் எம். லதா தேவி தெரிவித்தாா்.