சிங்கம்புணரி அருகே நாய்கள் துரத்திச் சென்று கடித்ததில் புள்ளிமான் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஓசாரிபட்டி தோப்புப் பகுதியில் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் வந்தது. அதைக் கண்ட நாய்கள் துரத்திச் சென்று கடித்ததில் மான் இறந்தது. இதுதொடா்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், பிரான்மலை வனவா் உதயகுமாா் இறந்த மானை மீட்டு, உடற்கூறாய்வுக்காக சிங்கம்புணரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். பின்னா் மான் பிரான்மலைப்பகுதியில் புதைக்கப்பட்டது.