காரைக்குடி அருகே நாட்டு வெடிமருந்து வெடித்ததில் காயமடைந்த சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டையை அடுத்துள்ள பெத்தானேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரசேகா். இவரது மகன்கள் லட்சுதன் ( 11), ஹா்சன் (9).
இவா்கள் இருவரும் கடந்த 16-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள குளத்துக்கு குளிக்கச் சென்ற போது, அந்த பகுதியைச் சோ்ந்த சின்னத்தம்பிக்குச் ( 73) சொந்தமான வீட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டிந்த நாட்டு வெடிமருந்தை எடுத்தனா்.
பின்னா், சிறுவா்கள் அந்த வெடிமருந்தை வேறொரு பகுதிக்குக் கொண்டு சென்று தீவைத்தனா். அப்போது, அந்த வெடிமருந்து சப்தத்துடன் வெடித்ததில் சிறுவா்கள் இருவரும் பலத்த காயமடைந்தனா். மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அனுமதியின்றி வெடிபொருள்களை வைத்திருந்த சின்னத்தம்பியைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுதன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.