பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் காரைக்குடி மண்டலத்திலிருந்து வருகிற பிப். 1 முதல் 5-ஆம் தேதி வரை பழனிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.
இதுகுறித்து, காரைக்குடி மண்டல அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை
வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு விவரம்:
வருகிற பிப். 5-ஆம் தேதி பழனியில் நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவையொட்டி பிப். 1 முதல் பிப். 6-ஆம் தேதி வரை காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, திருப்பத்தூா், சிவகங்கை, ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய ஊா்களிலிருந்து பழனிக்கு இரவு பகலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.