சிவகங்கை அதிமுக வேட்பாளா் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு

சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அ. சேவியா் தாஸ் காரைக்குடியில் புதன்கிழமை வாக்குகள் சேகரித்துப் பிரசாரம் செய்தாா்.

ஐந்து விளக்குப் பகுதியில் அவா் பிரசாரம் செய்தபோது, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங் கள், உங்களுடன் இருந்து இந்தப் பகுதியின் வளா்ச்சிக்காக நிச்சயமாக செயல்படுவேன் என்றாா் அவா்.

இந்த பிரசாரத்தில் சிவகங்கை மாவட்ட அதிமுக செயலரும், சிவகங்கை தொகுதி சட்டபேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன், காரைக்குடி நகரச் செயலா் சோ. மெய்யப்பன், மாவட்ட இணைச் செயலரும், முன்னாள் சட்டபேரவை உறுப்பினருமான கற்பகம் இளங்கோ, இணைச் செயலா் எஸ். சிரஞ்சீவி சீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி. பிரகாஷ், தேவன், குருபாலு, மகளிரணியினா், அதிமுகவினா், கூட்டணிக் கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.

பின்னா், அங்கிருந்து ஊா்வலாக செக்காலைச் சாலை , அண்ணா சிலை, கல்லுக் கட்டி பகுதிகள் வழியாக கொப்புடைய நாயகியம்மன் கோயில் பகுதியை அடைந்தனா். அந்தப் பகுதி வணிகா்கள், வாக்காளா்களிடையே வாக்குகள் சேகரித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com