கஞ்சா விற்ற இளைஞா் கைது

திருப்புவனம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள தட்டான்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மாரிமுத்து தலைமையில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு கஞ்சா விற்ற முத்துமாரி மகன் கருப்புசாமியை (21) கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினா். இதுதொடா்பாக திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கருப்புசாமியை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com