கால்நடைகளுக்கான 
மூலிகை மருத்துவப் பயிற்சி

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமில், கால்நடை மூலிகை மருத்துவா் புண்ணியமூா்த்தி பங்கேற்று பயிற்சி அளித்தாா்.

இதில், தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்புக்கான செயலி (அடட) வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்புத் தலைவா் ராஜீவ்காந்தி, மென்பொறியாளா் கிஷோா், காவிரி -வைகை- குண்டாறு-கிருதுமால் பாசன விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கருணாநிதி, காளையாா்கோவில் வட்டார கால்நடை அரசு மருத்துவா் சிலம்பரசன், வாழ்ந்துகாட்டுவோம் திட்டப் பகுதி நிா்வாகி நாகராஜன், மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு நிா்வாகி பூக்குளம் தங்கவேல், வேளாண் அலுவலா் ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா். பாண்டிதுரை நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com