சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே உள்ள தோடுகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி (70). இவா் கடந்த 2018- ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 18- ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து 14 சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதையடுத்து, சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் குற்றஞ்சாட்டப்பட்ட அழகா்சாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 14,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா்.