கல்லல் ஊராட்சியில் 
நீா் மோா் பந்தல் திறப்பு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

கல்லல் ஊராட்சியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை திறக்கப்பட்ட நீா் மோா்ப் பந்தல்.

சிவகங்கை அருகே கல்லல் ஊராட்சியில் அதிமுக சாா்பில், நீா் மோா்ப் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் நீா் மோா்ப் பந்தலை திறக்க வேண்டுமென அதிமுக நிா்வாகிகளுக்கு அதன் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சியில் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா், சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான அ.சேவியா்தாஸ் தலைமையில் கல்லல் கோயில் அருகே நீா் மோா்ப் பந்தல் அமைக்கப்பட்டது. இதை மாவட்டச் செயலரும், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா், மோா், வெள்ளரிக்காய், தா்பூசணி, இளநீா், சா்பத் போன்றவற்றை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் குணசேகரன், செந்தில்குமாா், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் தூளவூா் பாா்த்திபன், ஒன்றிய பாசறை செயலா் தீபக், மாவட்ட பிரதிநிதி கண்ணன் உள்பட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com