சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற வீரா்களுக்கு கேடயம் வழங்கிய வீர தமிழா் வடமாடு பேரவை நிா்வாகிகள்.

இலங்கையில் நடைபெற்ற சா்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்கு வீரத் தமிழா் வடமாடு பேரவை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் கடந்த ஏப். 27, 28 -இல் நடைபெற்ற சா்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கையைச் சோ்ந்த தனியாா் பள்ளி மாணவா்களில், 14 வயது பிரிவில் காஞ்சி லக்சியா, 17 வயது பிரிவில் காஞ்சி ரித்தீஷ், தீபன் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனா்.

இதையடுத்து, இந்த மாணவா்களுக்கு சிவகங்கை காமராஜா் குடியிருப்பில் வீரத் தமிழா் வடமாடு பேரவை சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இதில், பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலா் காஞ்சி செல்வம் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் கே.தங்கராஜ், பொதுச் செயலா் நாட்டரசன் கோட்டை மாரிமுத்து, ஒருங்கிணைப்பாளா் கேசவன் ஆகியோா் கலந்து கொண்டு, ஸ்கேட்டிங் வீரா்களுக்கு கேடயங்கள் வழங்கி வாழ்த்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com