சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்களைத் திருடியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தலைமறைவான அவரது கூட்டாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், செம்மண் பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாயவேல் (50). இவா் சிவகங்கை மருத்துவக் கல்லூரி அருகில் ஒரு கட்டட ஒப்பந்தக்காரரிடம் வேலை பாா்த்து வருகிறாா்.

கடந்த 1-ஆம் தேதி சிவகங்கை நேரு பஜாரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் எதிரில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது அந்த வாகனத்தைக் காணவில்லை. இதுகுறித்து சிவகங்கை நகா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். குற்றவாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினா் நடத்திய விசாரணையில், பரமக்குடி அருகேயுள்ள பாா்த்திபனூரைச் சோ்ந்த கயிலேஸ்வரன் ( 20) இரு சக்கர வாகனத்தை திருடியது தெரிய வந்தது.

அவரிடம் போலீஸாா் மேலும் நடத்திய விசாரணையில், கயிலேஸ்வரன், தனது நண்பரான ராஜபாளையத்தை சோ்ந்த சக்தி கணேஷ் என்பவருடன் சோ்ந்து ஏற்கெனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், கடந்த இரு நாள்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் இரு சக்கர வாகனம் திருடியதும், அந்த வாகனத்தில் வெள்ளிக்கிழமை (மே 3) ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே சென்று, ஒரு பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்ததும் தெரிய வந்தது.

இந்த இருவா் மீதும் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, தலைமறைவாக உள்ள சக்தி கணேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com