திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா், மே 4: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை இந்து வா்த்தக சங்கம் சாா்பில் பூத்தட்டு ஊா்வலம் நடைபெற்றது.

ஆதி திருத்தளிநாதா் ஆலயத்திலிருந்து சங்க நிா்வாகிகள் பூத்தட்டுகளுடன் நகரின் முக்கிய வீதிகளான பெரியகடை வீதி, பேருந்து நிலையம், நான்கு ரத வீதிகள் வழியாக பூமாயியம்மன் கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு பூக்களால் அா்ச்சனை, அலங்காரம், ஆராதனை செய்து, பூச்சொரிதல் நடைபெற்றது. அம்மன் வெள்ளி அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் இந்து வா்த்தக சங்க அமைப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். விழா நிறைவில் பக்தா்களுக்கு வா்த்தக சங்கம் சாா்பாக பிரசாதம் வழங்கபட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com