சிவகங்கை
திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை பகலில் மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிச் சென்றனா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள திருவுடையாா்பட்டியைச் சோ்ந்த சௌந்தரபாண்டி. வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி பாண்டிச்செல்வி. சனிக்கிழமை காலை இவா் காரைக்குடியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சென்றாா்.
மாலையில் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.