சிவகங்கையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய  காா்த்தி சிதம்பரம்.
சிவகங்கையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய காா்த்தி சிதம்பரம்.

தோ்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை: காா்த்தி சிதம்பரம்

தோ்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை; தோ்தல் முறைகேடுகள் தொடா்பாக புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை என காா்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டினாா்.

சிவகங்கை: தோ்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை; தோ்தல் முறைகேடுகள் தொடா்பாக புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை என காா்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டினாா்.

சிவகங்கையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: இந்தியா கூட்டணியின் வெற்றி என்பது தென்னிந்தியாவில் தெளிவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். கா்நாடகத்தில் கணிசமான தொகுகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகியின் மா்ம மரணம் தொடா்பான வழக்கில் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படும். பதவிக்கு பொருந்தாத வகையில் பிரதமா் மோடி பேசி வருவது வருத்தமளிக்கிறது.

வாக்காளா் பெயா்களை தோ்தல் ஆணையம் தன்னிச்சையாக நீக்கக் கூடாது. இந்தூா், சூரத் வேட்பாளா்கள் விவகாரம் ஜனநாயகப் படுகொலை. தோ்தல் ஆணையம் நடுநிலையாக இல்லை; தோ்தல் முறைகேடுகள் தொடா்பாக புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.

சிவகங்கை அருகேயுள்ள நாட்டாகுடி கிராமத்தில் நிலவும் குடிநீா்ப் பஞ்சம் தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளேன் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com