திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மணல் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, தப்பிச் சென்ற ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி போலீஸாா் இணைந்து திருப்புவனம் பகுதியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது, பாப்பாங்குளம் விலக்குப் பகுதியில் வந்த லாரியை மறித்து நிறுத்த முயன்றனா். ஆனால், அந்த லாரி நிற்காமல் சென்றது.

இதையடுத்து, போலீஸாா் அந்த லாரியை விரட்டிச் சென்று ஆலங்குளம் காலனி அருகே மறித்து நிறுத்தினா். அப்போது, லாரியின் ஓட்டுநரும், செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவருமான பால்பாண்டி தப்பியோடிவிட்டாா். பின்னா், லாரியை சோதனை செய்த போது, அதில் வைகையாற்றிலிருந்து கடத்தி வந்த இரண்டு யூனிட் ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அந்த லாரியை பறிமுதல் செய்து, திருப்புவனம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற பால்பாண்டியை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com