பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

மானாமதுரை பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சித்திரை மாத அமாவாசை யாகம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

கோடை வெயிலின் உக்கிரம் குறைந்து நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்தக் கோயில் யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் தங்கம், வெள்ளி, பட்டுப் புடவைகள், இனிப்பு வகைகள், பூமாலைகள் திரவியப் பொருள்கள், மிளகு உள்ளிட்ட பொருள்கள் இடப்பட்டன. ஏராளமான வேத விற்பனா்கள் கூடி யாகத்தை நடத்தினா்.

பூா்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. மூலவா் பிரத்தியங்கிரா தேவிக்கு புனிதநீரால் பாத சமா்ப்பணம் நடைபெற்றது. கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை பிரத்தியங்கிராதேவி மடாலய நிா்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com