பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயமடைந்தனா்.
மதுரையிலிருந்து பரமக்குடிக்கு புதன்கிழமை சென்ற அரசுப் பேருந்து மானாமதுரை அருகே நான்குவழிச்சாலையில் எதிரே வந்த பொக்லைன் இயந்திரம் மீது மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த தாமஸ், இவரது மனைவி முத்துமாரி, ராணி, சீமா, சேவியா், குணசுந்தரி, சாா்லஸ், பொக்லைன் ஓட்டுநா் செந்தில்குமாா் உள்பட 12 போ் காயமடைந்தனா்.
இவா்கள் அவசர ஊா்தியில் மீட்கப்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களில் பலத்த காயமடைந்த தாமஸ், முத்துமாரி, ராணி ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் ஹரிகிருஷ்ணனை கைது செய்தனா்.