வீட்டின் பூட்டை உடைத்து தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்களிடம் 13 பவுன் நகை பறிப்பு

ராஜபாளையம் 60 அடி சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீடுகளின் பின் பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்களிடம் 13 பவுன் நகைகள் பறித்துச் செல்லப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் 60 அடி சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீடுகளின் பின் பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்களிடம் 13 பவுன் நகைகள் பறித்துச் செல்லப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் அயோத்திராம் நகரில் வசிப்பவர் கோபால்ராஜா. இவரது வீட்டு பின்பக்க கதவை வெள்ளிக்கிழமை இரவு உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி ரேவதி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துச் சென்றான். அதே போல், இதே பகுதியில் வசிக்கும் ராமமூர்த்தி மனைவி காளீஸ்வரி தூங்கிக் கொண்டிருந்த போது இரவில் உள்ளே புகுந்த மர்ம நபர், அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றான்.

இச்சம்பவங்கள் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய போலீஸார் சனிக்கிழமை கைரேகை நிபுணர் உதவியுடன் விசாரணை செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com