கோயில்களில் சிறப்பு தரிசனக் கட்டண முறையை கைவிடக் கோரி விருதுநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.