வேலைக்கு சென்ற கணவர் வீட்டுக்கு திரும்பாததால், அவரை கண்டுபிடித்து தரக் கோரி மனைவி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கூமாபட்டி ஆர்.சி தெருவைச் சேர்ந்த கனி அளித்த மனு விவரம்: நான் கணவர் வேதமுத்து மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றேன். ஜூலை 1 அன்று மாட்டு கிடை வேலைக்காக சென்ற எனது கணவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இது குறித்து கூமாபட்டி போலீஸில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர், மாட்டுகிடையில் இருந்த போது சிலர் வந்து வாகனத்தில் கடத்தி சென்றதாக கூறுகின்றனர். எனவே, காணாமல் போன எனது கணவரை கண்டுபிடித்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.